×

டிரோன்கள் மூலம் ஆயுத சப்ளை மாவோயிஸ்டுகளுக்கு உதவிய 3 பேர் கைது

திருமலை: தெலங்கானாவில் 8 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை நடத்தியது. அப்போது, மாவோயிஸ்டுகளுக்கு டிரோன்கள் மூலம் ஆயுதங்கள், மின்னணு சாதனங்கள் வழங்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளுக்கு அதிநவீன ஆயுதங்கள் மற்றும் மின்னணு உபகரணங்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் ஒருகட்டமாக தெலங்கானா மாநிலம் வாரங்கல், ஜெட்சர்லா, கொத்தகுடம், பத்ராசலம் உள்பட 8 இடங்களில் நேற்று என்ஐஏ திடீர் சோதனை நடத்தியது.

இதில் மாவோயிஸ்டுகளுக்கு டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் மின்னணு உபகரணங்களை வழங்கிய குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் ஆளில்லா விமானங்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், மாவோயிஸ்டுகளுக்கு ஆளில்லா விமானங்கள், மின்னணு உபகரணங்களை வழங்கியதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post டிரோன்கள் மூலம் ஆயுத சப்ளை மாவோயிஸ்டுகளுக்கு உதவிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,NIA ,Telangana ,Maoists ,
× RELATED மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வென்றால்...